Tuesday, August 3, 2010

தீக்கடல்

பற்றி எரியும் கடல்
வான் முட்டும் புகை
கருநிற அலைகளில்
கொலுசோட்டம் அவள் தானோ- கால்கள்
தோளும் காலும் பற்றிக் கடலிறங்கும் நான்தானோ - முதுகு
உடலெங்கும் தீயின் சூடு
அதிர்வில் ஆர்ப்பரிக்கும் அலை
அலையற்ற கடல் கரும்பாறை
கலைந்தபின்னும் கனவின் வடு.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails