Tuesday, August 3, 2010

தொல்நிகழ்

மரத்தின் நிழலில் நின்று மரத்தை
வெட்டிக்கொண்டிருக்கிறேன்
வேர்வை
விசிறுகிறது கிளைகள்
அதிர்வில்
விரிகிறது வேர்மண்
ஆதிமனிதத் தன்மையில் இன்னும்
வேகமாய் இயங்குகிறேன்
எக்கணமும் விழுந்துவிடும்
விழப்போவது தெரியாமல் என்னைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
கிளைமீது தலைசாய்த்த பறவையொன்று

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails