Friday, July 16, 2010

உன்னால் கவிதை...unnaal kavithai

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்

உன் அழகை கண்டேன்,
நெருங்கி வந்தேன்,
சிரித்தாய் ,
கட்டி அணைத்தேன்,
முத்தமிட்டேன்

தனி அறையில் நீயும், நானும்,
உன்னை ரசித்தேன்,
உன் உடலை ரசித்தேன்,
உன் பேச்சை ரசித்தேன்,
நீ விலகிச்செல்வதை ரசித்தேன்,
நீ நெருங்கி வருவதை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து
பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பப்படி
வரைந்து ரசித்தேன்,
உன்னுடன் விளையாடி ரசித்தேன்,

உன்னால்....

எனக்கு பிடித்த வார்த்தைகளில்
இருந்து அழுகையை எடுத்துவிட்டு
காதலை சேர்த்துக்கொண்டேன்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails